சிங்கப்பூரில் வரலாற்றில் மிக மோசமான வன்முறை சம்பவம் ஒன்று நேற்று லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்றுள்ளது. மக்கள் தொகை நெருக்கமும், இறுக்கமான கட்டுப்பாடுகளையும் கொண்ட லிட்டில் இந்தியா என்ற பகுதியில் நேற்று இரவு 33 வயதான இந்தியத் தொழிலாளி ஒருவர் தனியார் பேருந்து ஒன்று மோதியதன் விளைவாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தினை தொடர்ந்து அங்கு கூடிய 400-க்கும் மேற்பட்டோர் வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து உடனடியாக சிறப்புக் காவல்பிரிவு அங்கு வரவழைக்கப்பட்ட பின்னரே நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் 25 இந்தியர்கள் , 2 வங்கதேச நபர்கள் மற்றும் 1 சிங்கப்பூர் தொழிலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிரம்படி உட்பட ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்பட்ட குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருத்து வரும் செய்திகள் தெரிவிகின்றன . இது குறித்து சிங்கபூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவிக்கையில் , இந்தக் கலவரத்தைத் தூண்டுவதற்கான காரணம் எதுவாக இருந்தபோதிலும், இதுபோன்ற வன்முறை, அழிவு மற்றும் குற்றவியல் நடத்தைகளை மேற்கொண்டவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் , மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண சட்டம் தனது முழு ஆற்றலுடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். காவல்துறை ஆணையாளரான என்ஜி ஜூ ஹூ இந்த வன்முறை செயலைக் கண்டித்துள்ளார். கலவரம் செய்தலும், சொத்துகளை அழித்தலும் சிங்கப்பூரின் வழியல்ல என்று இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் தெரிவித்தார். பல்வேறு சமூக மக்கள் வாழும் சிங்கப்பூரில் நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொது ஒழுங்குமுறையின் மதிப்பினை இந்த வன்முறை சம்பவம் குறைத்துள்ளதாகக் கருதப்படுகின்றது. கலவரத்திர்க்கான முக்கிய காரணமாக இனவெறி இருக்கும் எனவும் சந்தேகிக்கபடுகிறது . சீனர்களுக்கு அடிப்படையில் இந்தியர்களை பிடிப்பதில்லை எனவும் , முக்கியமாக தமிழர்களை மிகவும் வெறுக்கிறார்கள் எனவும் சிங்கப்பூரிலிருந்து வரும் செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன . இந்தியர்களின் மீதான நீண்ட காண வெறுப்பின் வெளிப்பாடாகவே இந்த கலவரம் இருந்துள்ளது என சிங்கபூர் தமிழர்கள் தெரிவிக்கின்றனர் . தமிழர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ள இந்த சூழலில் தமிழக அரசு மற்றும் இந்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும் என சிங்கப்பூர் வாழ் தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் .
Monday, December 9, 2013
சாலை விபத்தில் இந்தியர் பலி எதிரொலி - தமிழர்கள் கதறல்...
சிங்கப்பூரில் வரலாற்றில் மிக மோசமான வன்முறை சம்பவம் ஒன்று நேற்று லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்றுள்ளது. மக்கள் தொகை நெருக்கமும், இறுக்கமான கட்டுப்பாடுகளையும் கொண்ட லிட்டில் இந்தியா என்ற பகுதியில் நேற்று இரவு 33 வயதான இந்தியத் தொழிலாளி ஒருவர் தனியார் பேருந்து ஒன்று மோதியதன் விளைவாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தினை தொடர்ந்து அங்கு கூடிய 400-க்கும் மேற்பட்டோர் வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபட்டனர். இதனையடுத்து உடனடியாக சிறப்புக் காவல்பிரிவு அங்கு வரவழைக்கப்பட்ட பின்னரே நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் 25 இந்தியர்கள் , 2 வங்கதேச நபர்கள் மற்றும் 1 சிங்கப்பூர் தொழிலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிரம்படி உட்பட ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்பட்ட குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருத்து வரும் செய்திகள் தெரிவிகின்றன . இது குறித்து சிங்கபூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவிக்கையில் , இந்தக் கலவரத்தைத் தூண்டுவதற்கான காரணம் எதுவாக இருந்தபோதிலும், இதுபோன்ற வன்முறை, அழிவு மற்றும் குற்றவியல் நடத்தைகளை மேற்கொண்டவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் , மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண சட்டம் தனது முழு ஆற்றலுடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். காவல்துறை ஆணையாளரான என்ஜி ஜூ ஹூ இந்த வன்முறை செயலைக் கண்டித்துள்ளார். கலவரம் செய்தலும், சொத்துகளை அழித்தலும் சிங்கப்பூரின் வழியல்ல என்று இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் தெரிவித்தார். பல்வேறு சமூக மக்கள் வாழும் சிங்கப்பூரில் நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொது ஒழுங்குமுறையின் மதிப்பினை இந்த வன்முறை சம்பவம் குறைத்துள்ளதாகக் கருதப்படுகின்றது. கலவரத்திர்க்கான முக்கிய காரணமாக இனவெறி இருக்கும் எனவும் சந்தேகிக்கபடுகிறது . சீனர்களுக்கு அடிப்படையில் இந்தியர்களை பிடிப்பதில்லை எனவும் , முக்கியமாக தமிழர்களை மிகவும் வெறுக்கிறார்கள் எனவும் சிங்கப்பூரிலிருந்து வரும் செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன . இந்தியர்களின் மீதான நீண்ட காண வெறுப்பின் வெளிப்பாடாகவே இந்த கலவரம் இருந்துள்ளது என சிங்கபூர் தமிழர்கள் தெரிவிக்கின்றனர் . தமிழர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ள இந்த சூழலில் தமிழக அரசு மற்றும் இந்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டும் என சிங்கப்பூர் வாழ் தொழிலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment