Pages

Thursday, December 26, 2013

உயிர்களை கொள்ள ஏ.கே. 47 ரக துப்பாக்கியை வடிவமைத்த மிகைல் கலாஷ்னிகோவ் மரணம்!!!


Link to Original Article 


பாதுகாப்பு என்ற போர்வையில் உயிர் பலியை நவீன இயந்திர முறையில் செய்ய உருவாக்கப்பட்ட ஏ.கே.47 துப்பாக்கியை வடிவமைத்தவர் மிகைல் கலாஷ்னிகோவ் என்பவர் .  தனது 94ம் வயதில் நேற்று மரணமடைந்தார். ரஷ்யாவின் லெப்டினண்ட் ஜெனரலாக இருந்தவர் மிகைல் கலாஷ்னிகோவ்.  1919 ஆம் ஆண்டு மிகைல் கலாஷ்னிகோவ் ரஷ்யாவில் பிறந்தவர் . மிகைல் கலாஷ்னிகோவ் ரஷ்ய ராணுவ படைக்கு ஆயுதங்களை வடிவமைக்கும் பணியில் இருந்தவர் . மிகவும் பிரபலமான உயிர் கொள்ளும் இயந்திரமான  ஏ.கே.47  இவரால் உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டது .  94 வயதான மிகைல் கலாஷ்னிகோவ் வயோதிகம் காரணமாக பலகீனம் அடித்தார் . சில நாட்களுக்கு முன்னிருந்து உடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருந்தது . மருத்துவ சிகிச்சையும் பெற்று வந்தார் . துப்பாக்கி குண்டு உடலில் துளைத்து ரத்தம் கசிந்து வெளியேறி உயிர் இழப்பு ஏற்படுகிறது . எத்தனையோ உயிர்கள் குண்டடி பட்டு இறந்தன என்றால் அதில் முக்கிய பங்கு ஏ.கே.47 க்கு உண்டு எனலாம் . மிகைல் கலாஷ்னிகோவ்  இரண்டாம் உலகப்போருக்கு பிறகே இந்த  ஏ.கே. 47 ரக துப்பாக்கியை வடிவமைத்தார். நல்ல வேளை , ஜெர்மனியை சுற்றி இருந்த பல மக்கள் தப்பித்து கொண்டனர் .  மிகைல் கலாஷ்னிகோவ் வின் இந்த நவீன உயிர் கொல்லும் கருவியின் கண்டுபிடிப்பிற்காக அவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது. தனது கண்டுபிடிப்பை குறித்து மனம் நொந்த மிகைல் கலாஷ்னிகோவ் , ‘எனது கண்டுபிடிப்பான ஏ.கே. 47 ரக துப்பாக்கியை சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்துவதை பார்க்கிறபோது , மிகவும் வருத்தமாக உள்ளது' எனக் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment